sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது

/

 கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது

 கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது

 கைலாய ஆன்மிக சுற்றுலா பெயரில் ரூ.12.70 லட்சம் மோசடி: இருவர் கைது


ADDED : நவ 14, 2025 03:06 AM

Google News

ADDED : நவ 14, 2025 03:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கைலாயத்திற்கு ஆன்மிக சுற்றுலா என்ற பெயரில் 38 பேரிடம் 12.70 லட்சம் ரூபாயை வசூல் செய்து மோசடியில் ஈடுபட்ட, இருவர் கைது செய்யப்பட்டனர்.

திருவல்லிக்கேணி, வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள், 54. இவரிடம், அம்பத்துாரைச் சேர்ந்த சுவாதீஸ்வரன், 34 என்பவர், குறைந்த பணத்தில் ஆன்மிக சுற்றுலாவாக கைலாயம் அழைத்துச் செல்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதை நம்பிய பெருமாள் 40,000 ரூபாய் கொடுத்துள்ளார்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லவில்லை. கொடுத்த பணத்தையும் திருப்பி தரவில்லை. அதுமட்டுமல்லாமல், சுவாதீஸ்வரனின் மொபைல் போனும் 'சுவிட்ச் ஆப்'பில் இருந்தது. ஏமாற்றப்பட்டதை அறிந்த பெருமாள், ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசாரின் விசாரணையில், ஆன்மிக சுற்றுலா பெயரில் பெருமாள் உட்பட 38 பேரிடம் இருந்து, 12.70 லட்சம் ரூபாய் வசூலித்து, சுவாதீஸ்வரன் ஏமாற்றியது தெரியவந்தது.

தலைமறைவாக இருந்த சுவாதீஸ்வரன் மற்றும் ஆன்மிக வாதிகளிடம் பணம் வசூல் செய்து மோசடிக்கு உடந்தையாக இருந்த, ராயப்பேட்டையைச் சேர்ந்த செல்வி, 58 என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us