தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பொறியாளரிடம் செயின் பறித்த இருவர் கைது

பொறியாளரிடம் செயின் பறித்த இருவர் கைது

பொறியாளரிடம் செயின் பறித்த இருவர் கைது


ADDED : ஜன 18, 2025 12:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 18, 2025 12:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, அண்ணா நகர், சாந்தி காலனியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ், 31; எஸ்.ஆர்.எம்., பல்கலையில் பொறியாளராக உள்ளார்.

கடந்த 12ம் தேதி இரவு, சொந்த ஊரான திருவண்ணாமலை செல்வதற்காக, கிண்டி ரயில் நிலையம் வந்தார்.

நடைமேடை மூன்று அருகே, இரண்டு மர்ம நபர்கள் வழிமறித்து, அவரது கழுத்தில் இருந்த, 2 சவரன் செயினை பறித்துச் சென்றனர்.

மாம்பலம் ரயில்வே போலீசார் விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது கொருக்குப்பேட்டை சரண்ராஜ், வியாசர்பாடி விக்ரம் என்பது தெரியவந்தது.

நேற்று, இருவரையும் கைது செய்த போலீசார், 2 சவரன் செயினை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us