/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சாரம் பாய்ந்து இரு எருமை மாடுகள் பலி
/
மின்சாரம் பாய்ந்து இரு எருமை மாடுகள் பலி
ADDED : நவ 18, 2025 04:38 AM
கோயம்பேடு: கோயம்பேடு சந்தை - 18ம் எண் நுழைவாயில் அருகே, வலது புறம் குப்பை குவிக்கப்பட்டு, அங்கிருந்து அங்காடி நிர்வாக குழு சார்பில், லாரி வாயிலாக குப்பை அகற்றப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் அங்குள்ள குப்பை, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் அள்ளி, லாரி வாயிலாக அகற்றப்பட்டது. அப்போது, தரையில் செல்லும் மின் கேபிள் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று அதிகாலை அங்கு கொட்டப்பட்ட கழிவுகளை உண்ண சென்ற இரு எ ருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன.
மின் வாரிய ஊழியர்கள், மின் கேபிளை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சமீபத்தில் பசு மாடு ஒன்று மின்சாரம் பாய்ந்து பலியானது.
இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் இடையே, அச்சம் நிலவி வருகிறது.
மனித உயிர் பலி ஏற்படும் முன், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

