/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் பலி
/
திறக்காத பாலத்தில் விபத்து மீனவர்கள் இருவர் பலி
ADDED : ஜன 15, 2024 01:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழவேற்காடு:திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு, பசியாவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிகாமணி, 46; மீனவர். பழவேற்காடு - பசியாவரம் இடையே கட்டி முடிக்கப்படாத உயர்மட்ட பாலத்தில் நடந்து சென்றார்.
அப்போது, பின்னால் 'யமஹா' இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த சாட்டன்குப்பம் மீனவர் முத்துப்பாண்டியன், 24, என்பவர், சிகாமணி மீது மோதி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி விழுந்தார்.
இதில், சம்பவ இடத்திலே முத்துபாண்டியன் பலியானார். தலையில் படுகாயமடைந்த சிகாமணி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நள்ளிரவு 2:00 மணிக்கு உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருப்பாலைவனம் போலீசார் விசாரிக்கின்றனர்.