/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ் - ஆட்டோ மோதல் இருவர் படுகாயம்
/
பஸ் - ஆட்டோ மோதல் இருவர் படுகாயம்
ADDED : அக் 23, 2024 12:47 AM
வியாசர்பாடி, மாநகர பேருந்து - ஆட்டோ நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலத்த காயமடைந்தனர்.
காரனோடையில் இருந்து, உயர்நீதிமன்றம் நோக்கி, தடம் எண் '57எச்' மாநகர பேருந்து சென்றுள்ளது.
வியாசர்பாடி, அம்பேத்கர் கல்லுாரி எதிரே மணலி சாலையில், திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, எதிரே வந்த ஆட்டோவில் மோதியது.
இதில், ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. அதில் பயணித்த ஓட்டுனர் அஜித், 28, மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஆண் பயணி ஒருவரும், பலத்த காயமடைந்தனர்.
அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பேருந்தின் முன்பக்கமும் சேதமானது. நல்வாய்ப்பாக, பேருந்தில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
சம்பவம் குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்த விபத்தால் அந்த சாலையில், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.