/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண்னை கிண்டல் செய்த இருவருக்கு சிறை
/
பெண்னை கிண்டல் செய்த இருவருக்கு சிறை
ADDED : நவ 15, 2024 12:57 AM
திருமங்கலம், நவ. 15--
திருமங்கலம், பாடிக்குப்பம், காந்தி நகரைச் சேர்ந்தவர் தினகரன், 21. இவர், கடந்த சில நாட்களுக்கு முன், உறவினர் பெண் ஒருவருடன் தெருவில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மூன்று வாலிபர்கள், அப்பெண்ணை கிண்டல் செய்ததாக தெரிகிறது.
இதை, தினகரன் தட்டிக் கேட்டதால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த வாலிபர்கள், தினகரனை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர்.
காயமடைந்த தினகரனை அங்கிருந்தோர் மீட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த புகாரின்படி திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து, பாடிக்குப்பத்தைச் சேர்ந்த சிரஞ்சீவி, 25, ஜீவா, 24, இருவரையும், நேற்று முன்தினம் இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவான பிரகாஷ் என்பவரை தேடி வருகின்றனர்.