sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி

/

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி

கன்டெய்னர் லாரி மோதி மாணவர்கள் இருவர் பலி


ADDED : ஜன 05, 2024 01:05 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூந்தமல்லி, மதுரவாயல் அடுத்த நொளம்பூரைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர்.

இவரது மகன் மாதேஷ், 20; தண்டலத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பொறியியல் இறுதியாண்டு படித்து வந்தார். இவர், நேற்று காலை 'யமஹா ஆர்ஒன் 5' இருசக்கர வாகனத்தில், முகப்பேர் மேற்கு, ஜெ.ஜெ., நகரைச் சேர்ந்த அவரது நண்பர் வைசால், 20, உடன் கல்லுாரி சென்று கொண்டிருந்தார்.பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை கூட்டுச்சாலை அருகே சென்றபோது, சாலையோரத்தில் பழுதாகி நின்ற வேன் மீது மோதாமல் இருக்க, வலதுபுறம் திரும்பிய போது, இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.அப்போது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி ஒன்று இருவர் மீது ஏறி இறங்கியதில், மாதேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வைசால், போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.தகவலறிந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார், அவர்கள் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விபத்துக்கு காரணமான வேன் மற்றும் கன்டெய்னர் ஓட்டுனர்களான பால்ராஜ், 58, ராமசாமி, 40, ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us