sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ஆய்வகத்தில் குடுவை வெடித்து இரு மாணவர்கள் படுகாயம்

/

 ஆய்வகத்தில் குடுவை வெடித்து இரு மாணவர்கள் படுகாயம்

 ஆய்வகத்தில் குடுவை வெடித்து இரு மாணவர்கள் படுகாயம்

 ஆய்வகத்தில் குடுவை வெடித்து இரு மாணவர்கள் படுகாயம்


ADDED : டிச 13, 2025 05:08 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: அண்ணா பல்கலை ஆய்வுக்கூடத்தில், ரசாயன கண்ணாடி குடுவை வெடித்து சிதறியதில், இரு மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

அண்ணா பல்கலையில் பயிலும் எம்.டெக்., மற்றும் பி.டெக்., மாணவ - மாணவியர், செய்முறை தேர்வுக்கான பரிசோதனையில், ஆய்வகத்தில் நேற்று ஈடுபட்டிருந்தனர். அப்போது, குடுவையில் பிடிக்கப்பட்ட ஹைட்ரஜன் பெராக்சைடு ரசாயனம், திடீரென வெடித்து சிதறியது.

இதில், கண்ணாடி துகள்கள் முகம், கைகளில் குத்தியும், ரசாயனம் கண்களில் பட்டதிலும், எம்.டெக்., மாணவர் நித்திஷ், 23, பி.டெக்., மாணவர் சூர்யா, 20, ஆகியோர் படுகாயமடைந்தனர்.

சக மாணவர்கள் இருவரையும் மீட்டு, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us