sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கூவம் ஆற்றில் மூழ்கி டூ- வீலர் மெக்கானிக் பலி

/

கூவம் ஆற்றில் மூழ்கி டூ- வீலர் மெக்கானிக் பலி

கூவம் ஆற்றில் மூழ்கி டூ- வீலர் மெக்கானிக் பலி

கூவம் ஆற்றில் மூழ்கி டூ- வீலர் மெக்கானிக் பலி


ADDED : மார் 26, 2025 12:20 AM

Google News

ADDED : மார் 26, 2025 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி, ஆவடி காமராஜர் நகர், மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ், 45 ; டூ- வீலர் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். அவரது மனைவி சாந்தி, 44. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று முன்தினம் காலை சென்னை புதுப்பேட்டை செல்வதாக கூறி சென்ற ரமேஷ் வீடு திரும்பவில்லை.

ரமேஷ் கடையில் பணிபுரியும் கௌதம் என்பவர், 'சேக்காடு அருணாச்சலம் நகர் கூவம் ஆற்றில் குளிக்க சென்ற ரமேஷ் நீரில் மூழ்கி காணாமல் போனதாக' சாந்திக்கு தகவல் தெரிவித்தார். சாந்தி சென்று பார்த்த போது, கரையில் கணவர் ரமேஷின் உடை, 'ப்ளூ டூத் ஹெட் செட்' மற்றும் மொபைல் போன் இருந்தது கண்டு கதறி அழுதார்.

புகாரின் படி, சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி தீயணைப்பு துறையினர், இரவு 7:00 மணி வரை தேடியும் அவர் கிடைக்கவில்லை. நேற்று காலை சென்னையில் இருந்து வந்த மெரினா மீட்பு படையினருடன், ஆவடி தீயணைப்பு துறையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். கூவம் ஆறு முழுதும் ஆகாய தாமரை படர்ந்து இருந்தது. இதனால், ரமேஷை கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து தீவிர தேடுதலுக்கு பின், நேற்று பகல் 12:45 மணியளவில் ஆகாய தாமரை அடியில் மிதந்து கொண்டிருந்த ரமேஷ் உடலை மீட்பு குழுவினர் மீட்டனர். ஆவடி போலீசார், அவரது உடலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

***






      Dinamalar
      Follow us