sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி

/

டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி

டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி

டூ - வீலர்கள் மோதல் பெயின்டர், மாணவர் பலி


ADDED : மார் 16, 2024 12:15 AM

Google News

ADDED : மார் 16, 2024 12:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு, ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ், 21. செங்கல்பட்டில் தங்கி, சட்டக் கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, நண்பர்கள் இருவருடன் 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில், செங்கல்பட்டில் இருந்து மேலமையூர் நோக்கிச் சென்றார்.

அண்ணா நகர் பிரதான சாலையில் வேகமாக வந்தபோது, எதிரே டி.வி.ஸ்., - எக்ஸ்.எல்., சூப்பர் வாகனத்தில் வந்த திருமணி பகுதியைச் சேர்ந்த பெயின்டர் நந்தகோபால், 40, அவரது நண்பர் தணிகாசலம், 32, ஆகியோர் மீது, சதீஷின் பைக் நேருக்கு நேர் மோதியது.

இதில், நந்தகோபால் மற்றும் மாணவர் சதீஷ் இருவரும் துாக்கி வீசப்பட்டு, அதே இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த மற்ற மூவரும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

செங்கல்பட்டு நகர போலீசார், நந்தகோபால் மற்றும் சதீஷ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.






      Dinamalar
      Follow us