/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நந்தனத்தில் புதிய பூங்கா உதயநிதி திறந்து வைப்பு
/
நந்தனத்தில் புதிய பூங்கா உதயநிதி திறந்து வைப்பு
ADDED : ஜன 24, 2026 06:39 AM

சென்னை: நந்தனத்தில் புதிய பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களை, துணை முதல்வர் உதயநிதி நேற்று திறந்து வைத்தார்.
நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிறுவன தலைமைய க வளாகத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான, 3,588 சதுர மீட்டர் இடத்தையும் சேர்த்து, 3,750 சதுர மீட்டர் பரப்பளவில், 3.50 கோடி ரூபாய் மதிப்பில், 'மெட்ரோஸ் பூங்கா' மற்றும் விளையாட்டு மைதானங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவற்றை, துணை முதல்வர் உதயநிதி, நேற்று திறந்து வைத்தார். இந்த விளையாட்டு மைதானத்தில், மூன்று பூப்பந்து அரங்குகள், இரண்டு பிக்கிள் பந்து விளையாட்டு அரங்குகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் ஆகியவை அமைக்கப்பட்டு உள்ளன.
பூங்காவை சுற்றி சிறுவர்கள் விளையாட்டு பகுதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், உள் அமர்வு மற்றும் வெளியரங்க அமர்வு பகுதி கள், வாகன நிறுத்துமிடம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளுக்கு, பொதுமக்கள் இடையூறின்றி எளிதாக செல்ல, அண்ணா சாலை ஒட்டி பிரத்யேக நுழைவாயில் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்கா மற்றும் விளையாட்டு அரங்குகளை, காலை 5:00 மணி முதல் 9:00 மணி, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

