/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராமாபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
/
ராமாபுரத்தில் நுாலகம் உதயநிதி திறந்து வைப்பு
ADDED : மார் 11, 2026 05:55 AM

ராமாபுரம்: ராமாபுரத்தில் தி.மு.க., இளைஞர் அணி சார்பில் அமைக்கப்பட்ட நுாலகத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார்.
வளசரவாக்கம் மண்டலம், 154வது வார்டு ராமாபுரம், நாயுடு சாலையில், தென் சென்னை தெற்கு மாவட்டம் தி.மு.க., இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரவி ஏற்பாட்டில், 'கலைஞர் நுாலகம்' அமைக்கப்பட்டது.
இதில், அரசு போட்டி தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக உதவும் புத்தகங்கள், பள்ளி பாடப்புத்தகங்கள், அரசியல், ஆன்மிகம், நாவல்கள் உள்ளிட்ட பல்வேறு வகை புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்கள் பயன்பாட்டிற்காக இணைய வசதியுடன் இரண்டு கணினிகளும் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
கவுன்சிலர் செல்வகுமார் முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் சுப்பிரமணியன், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வளசரவாக்கம் மண்டல குழு தலைவர் ராஜன், 151வது வார்டு கவுன்சிலர் சங்கர் கணேஷ், 155வது வார்டு கவுன்சிலர் ராஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

