ADDED : ஏப் 13, 2026 10:42 PM
அ நிறம் | அளவு
ஆவடி:உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்து சென்ற, 2 லட்சம் ரூபாயை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை அருகே நேற்று மதியம் தேர்தல் பறக்கும் படையினர், வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது 'டொயோடோ இன்னோவா' காரில் வந்த பிரகாஷ் என்பவர், உரிய ஆவணங்களின்றி 2.02 லட்சம் ரூபாய் எடுத்து சென்றது தெரிந்தது.
பறக்கும் படையினர் அவற்றை பறிமுதல் செய்து, ஆவடி அரசு கருவூலத்தில் நேற்று ஒப்படைத்தனர்.
