/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தேவையற்ற வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்
/
தேவையற்ற வழிகாட்டி பலகை வாகன ஓட்டிகள் குழப்பம்
ADDED : மார் 05, 2024 12:47 AM
சென்னை, நுங்கம்பாக்கம் பகுதியில், சோதனை அடிப்படையில் ஒரு நாள் போக்குவரத்து மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட வழிகாட்டி பலகையை அகற்ற வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை, நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங் சாலை, அண்ணா மேம்பாலம் பகுதியில் நேற்று முன்தினம், ஒரு நாள் சோதனை அடிப்படையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
வாகன ஓட்டிகள் வசதிக்காக ஆங்காங்கே, எப்படிச் செல்ல வேண்டும் என்பதற்காக வழிகாட்டி பலகைகளை, போக்குவரத்து போலீசார் வைத்திருந்தனர்.
சோதனை ஓட்டம் முடிந்த பிறகும், இந்த வழிகாட்டி பலகைகளை போக்குவரத்து போலீசார் அகற்றாமல் உள்ளனர்.
இதனால், உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர் வாகன ஓட்டிகளும் குழப்பம் அடைகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மேற்கண்ட வழிகாட்டி பலகைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

