sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

/

திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்

திறந்தநிலை வடிகால்வாயை மூடுகால்வாயாக மாற்ற பெருங்குடி மண்டல குழு கூட்டத்தில் வலியுறுத்தல்


ADDED : மே 10, 2025 12:18 AM

Google News

ADDED : மே 10, 2025 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உள்ளகரம்,

பெருங்குடி மண்டல குழு கூட்டம், தலைவர் ரவிச்சந்திரன் தலைமையில், நேற்று நடந்தது. மண்டல உதவி கமிஷனர் - பொறுப்பு, முரளி மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஷெர்லி, 187வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: அய்யப்பன் நகரில், மின் கம்பிகள் தாழ்வாக தொங்குகின்றன. சபரி சாலை மின்மாற்றியை திறன் உயர்த்த வேண்டும். ஏரிக்கரை நடைபாதையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

சபீனா, 188வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டு முழுதும் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற வேண்டும். விஜயநகரில் இருந்து கீழ்க்கட்டளைக்கு, எங்கள் வார்டு வழித்தடத்தில் சிற்றுந்து இயக்க வேண்டும்.

லட்சுமி, 191வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்: காந்தி தெரு, வீராத்தம்மன் கோவில் தெருவில், மழைக் காலத்திற்குள் வடிகால்வாய்களை சீரமைக்க வேண்டும். வார்டில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

விஸ்வநாதன், 181வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கோடைக்காலம் என்றாலும், பகிங்ஹாம் கால்வாய் பகுதியில், கொசு மருந்து தெளிப்பதை முறையாக செயல்படுத்த வேண்டும்.

தமிழரசி, 182வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்வாய் பணிகளை துரிதப்படுத்த வேண்டும். வார்டில் உள்ள இறகுப்பந்து திறந்தவெளி அரங்கை உள் விளையாட்டு அரங்காக மாற்ற வேண்டும்.

சர்மிளா, 185வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: திறந்த நிலையில் உள்ள வடிகால்வாய்களை, மூடுகால்வாயாக மாற்ற வேண்டும். உள்ளகரம், சுவாமிநகரில் சுகாதாரமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

அதற்கு, மண்டல குழு தலைவர் ரவிச்சந்திரன் பதிலளைத்து பேசியதாவது:

பெருங்குடி மண்டலத்தில், மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உடனுக்குடன் மேற்கொள்ளப்படுகின்றன.

வார்டு கவுன்சிலர்களும் மக்கள் தேவையை கேட்டறிந்து, அதிகாரி, அலுவலர்களுடன் இணைந்து நிறைவேற்றித் தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us