sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

/

வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்

வள்ளலார் சர்வதேச மாநாடு அமைச்சர் சேகர்பாபு தகவல்


ADDED : அக் 07, 2025 12:28 AM

Google News

ADDED : அக் 07, 2025 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை,'செ ன்னையில், 10,000 பேர் பங்கேற்கும் வள்ளலார் சர்வதேச மாநாடு நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும்' என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

வள்ளலாருக்கு பெருமை சேர்க்கும் வகையில், வடலுாரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, 99 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது. பல்வேறு நீதிமன்ற வழக்குகளுக்கு பின், மைய கட்டுமான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

முதற்கட்ட பணிகள் முடிந்து மையம், டிசம்பரில் வள்ளலாரின் சீடர்களுக்கு அர்பணிக்கப்படும். சென்னையில், 10,000 சன்மார்க்க அன்பர்கள் பங்கேற்கும் வள்ளலார் சர்வதேச மாநாடு, நவம்பர் அல்லது டிசம்பரில் நடத்தப்படும். இதில், 2,000 பெண்களும் பங்கேற்பர்.

இந்த மாநாட்டில் வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் 25 பேருக்கு பட்டயம் வழங்கப் படும். வள்ளலார் குறித்த நுாலும் வெளியிடப்படும்.

இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us