/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வி.சி., நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை
/
வி.சி., நிர்வாகி துாக்கிட்டு தற்கொலை
ADDED : மார் 05, 2024 12:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க.நகர், பெரம்பூர், சபாபதி தெருவைச் சேர்ந்தவர் கரிமுல்லா கான், 41; கொளத்துார் தொகுதி வி.சி.க., துணை அமைப்பாளர். கட்டுமானத் தொழில் செய்து வந்த இவருக்கு, தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு கடன் அதிகரித்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், வீட்டில் கரிமுல்லா கான் தனியாக இருந்துள்ளார்.
இவரது மனைவி பாத்திமா பீபி மாலை 5:00 மணியளவில் வீடு திரும்பிய போது, படுக்கை அறையில் துாக்கில் தொங்கிய நிலையில், கரிமுல்லா கான் இறந்து கிடந்துள்ளார். திரு.வி.க.நகர் போலீசார், உடலை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

