sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

சாலையில் விழிப்புணர்வு: மக்கள் அவதி

/

சாலையில் விழிப்புணர்வு: மக்கள் அவதி

சாலையில் விழிப்புணர்வு: மக்கள் அவதி

சாலையில் விழிப்புணர்வு: மக்கள் அவதி


ADDED : ஜன 04, 2024 12:30 AM

Google News

ADDED : ஜன 04, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம், செங்குன்றம் புறவழிச்சாலை- - மாதவரம் நெடுஞ்சாலை வடகரை சந்திப்பில், செங்குன்றம் போக்குவரத்து போலீசார் நேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

அதில், நன்கொடையாளர்கள் உதவியுடன், 500 பேருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சிக்காக, போக்குவரத்து மிகுந்த வடகரை சாலை சந்திப்பை ஆக்கிரமித்து, பந்தல் மற்றும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேனர்கள் அமைக்கப்பட்டன. அதனால், நேற்று காலை முதல், அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதனால், செங்குன்றம், வடகரை சுற்று வட்டாரங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் படிக்கும் மாணவ - மாணவியர், மாலையில் வீட்டிற்கு செல்ல வழக்கம் போல் அந்த சந்திப்பை கடந்து செல்ல முடியாமல், மாற்றுப்பாதையில் சுற்றிச் சென்றனர்.

மாலை 5:00 மணிக்கு பின், அந்த இடத்தில் பயங்கரமான நெரிசல் ஏற்பட்டது. இதனால், பல தரப்பினரும் பாதிக்கப்பட்டனர். போக்குவரத்து நிறைந்த நேரத்தில், சாலையை ஆக்கிரமித்து இவ்வாறு விழிப்புணர்வு ஏற்படுத்துவது சரியா என, பலரும் கேள்வி எழுப்பினர்.






      Dinamalar
      Follow us