/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு
/
ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு
ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு
ஊக்கத்தொகை அறிவிப்பால் குடிநீர் வரி வசூல் அதிகரிப்பு
ADDED : நவ 12, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நவ. 12-
குடிநீர் வாரியத்தில், 13.96 லட்சம் பேர் வரியும், 9.13 லட்சம் பேர் கட்டணமும் செலுத்துகின்றனர். மாநகராட்சி போல் குடிநீர் வாரியமும், 5 சதவீதம் ஊக்கத்தொகை அறிவித்தது.
அதன்படி, நிலுவை இல்லாமல், அக்டோபரில் வரி செலுத்துபவர்களுக்கு, 5 சதவீதம் அல்லது 1,500 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
கடந்த 2023 - 24ம் நிதியாண்டில், அக்டோபரில், 103 கோடி ரூபாய் வசூலானது. அதுவே, 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கிய, 2024 - 25ல் அக்டோபரில், 170 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இதன் காரணமாக, ஆண்டு வரி வருவாயும் அதிகரிக்கும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.