ADDED : பிப் 18, 2025 12:18 AM
அ நிறம் | அளவு
பெரம்பூர்,
விநாயகபுரம், நேரு நகரைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 70. இவர், நேற்று முன்தினம் திருமுல்லைவாயில் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு, ரயில் மூலம் பெரம்பூர் வந்தார். அங்கிருந்து விநாயகபுரம் செல்ல, தடம் எண்: 142 அரசு பேருந்தில் ஏற முயன்றார்.
அப்போது மூதாட்டியின் பின்னால் சென்ற பெண் ஒருவர், மூதாட்டியிடம், 'விரைந்து ஏறுங்கள் பஸ் கிளம்ப போகிறது' என கூறியபடி அவசரப்படுத்தி உள்ளார்.
அதேநேரம், மூதாட்டியின் கவனத்தை திசை திருப்பி 2 சவரன் செயினை பறித்து மாயமானார். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.
