sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்

/

தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்

தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்

தி.மு.க., சார்பில் நலதிட்ட உதவிகள்


ADDED : பிப் 23, 2024 12:21 AM

Google News

ADDED : பிப் 23, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓட்டேரி, ''இந்தியாவில் முதலீடு செய்ய நினைத்தால், முதலில் தமிழகத்தின் கதவைத் தான் முதலீட்டாளர்கள் தட்டுவர்,'' என, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசினார்.

ஓட்டேரி, செல்லப்பா தெருவில், தமிழக முதல்வர் ஸ்டாலினின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், அப்பள தொழிலாளர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் பண உதவி வழங்கி, அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசியதாவது:

உலகமே அறியும் வகையில், திராவிட மாடல் ஆட்சி நடந்து வருகிறது. தி.மு.க., மட்டும் தான் மக்களுக்கான இயக்கம். 10 ஆண்டு காலம் இருண்ட ஆட்சியில் இருந்த தமிழகம் மீண்டுள்ளது.

தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற, மூன்று ஆண்டுகளில் மட்டும், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தமிழகத்தில் ஈர்க்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதலீடுகள் எங்கு வர நினைத்தாலும், முதலீட்டாளர்கள் முதலில் தமிழகத்தின் கதவைத் தான் தட்டுகின்றனர். ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் மக்களுக்காகவே தி.மு.க., இருக்கிறது.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us