sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்

/

காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்

காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்

காவல் நிலையத்தில் என்ன நடக்குது? கேட்டறிந்த பள்ளி மாணவர்கள்


ADDED : செப் 10, 2025 12:30 AM

Google News

ADDED : செப் 10, 2025 12:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கே.கே.நகர், காவல் நிலையத்திற்கு சென்ற பள்ளி மாணவர்கள், அங்கு நடக்கும் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர்.

காவலர் தினத்தை முன்னிட்டு, காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து, பள்ளி மாணவர்கள் அறியும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, கே.கே.நகர் காவல் நிலையத்தில் நேற்று நடந்தது.

கே.கே., நகரில் உள்ள வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 45 பேர், காவல் நிலையம் சென்றனர். காவல் துறையின் செயல்பாடுகள் குறித்து, இன்ஸ்பெக்டர் ரத்தினக்குமார் விவரித்தார்.

அப்போது, 'காவல் நிலையங்களில் புகார் அளிக்க வயது வரம்பு இல்லை. பாதிக்கப்பட்ட யார் வேண்டுமானாலும் புகார் தெரிவிக்கலாம்' என்றார். சட்டம் - ஒழுங்கு, குற்றப்பிரிவு அன்றாட அலுவல்கள் குறித்தும் விவரித்தார்.

காவல் நிலைய கணினி அறை, ஆய்வாளர் அறை, தகவல் பலகை மற்றும் கோப்புகளை பள்ளி மாணவர்கள் நேரில் பார்வையிட்டனர்.

அதேபோல், மதுரவாயல் காவல் நிலையத்திற்கு, பள்ளி மாணவர்கள், 60க்கும் மேற்பட்டோர் சென்றனர். அவர்களுக்கு, கோயம்பேடு துணை கமிஷனர் சுஜித்குமார் ஆசிரியராக மாறி, காவல் நிலைய பணிகள் குறித்து பாடம் நடத்தினார்.






      Dinamalar
      Follow us