/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?
/
போலீஸ் ‛'பூத்'கள் கவனிக்கப்படுமா?
ADDED : ஜன 18, 2024 12:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓட்டேரி, குக்ஸ் சாலை சந்திப்பில் உள்ள போலீஸ் பூத் பராமரிப்பின்றி குப்பை கூளமாக உள்ளது. 2008ல் சீரமைத்து திறந்து வைக்கப்பட்ட இந்த நிலையம், அதன் பயன்பாட்டை தவிர்த்து மற்ற செயல்களுக்கு பயன்பட்டு வருகிறது. சென்னையில் இந்த இடத்தில் மட்டுமின்றி, கொளத்துார், வில்லிவாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள போலீஸ் பூத்துகளின் நிலைமை இது தான். தற்போது இவை, சாலையில் சுற்றத்திரியும் நாய்களுக்கும், மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு புகலிடமாக மாறி வருகிறது.
-ஜமுனா, இல்லத்தரசி, ஓட்டேரி.