/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா?
/
சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா?
சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா?
சாலைகளில் 'பேட்ச் ஒர்க்' துவக்கம் பருவமழைக்கு தாக்கு பிடிக்குமா?
ADDED : நவ 03, 2025 01:28 AM

சென்னை: மழை ஓய்ந்துள்ள நிலையில், சென்னையில் சேதமான சாலைகளில் ஒட்டுபோடும் பணிகளை, நெடுஞ்சாலைத்துறை துவங்கியுள்ளது.
சென்னையில் பெரும்பாலான சாலைகள், மாநகராட்சி பராமரிப்பிலும், 250 கி.மீ., சாலைகளை, மாநில நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பிலும் உள்ளன. மெட்ரோ ரயில் பணிகள் நடந்துவரும் சாலைகள், அந்நிறுவன கட்டுப்பாட்டில் உள்ளன.
அவதி மெட்ரோ ரயில் நிறுவனம், சாலைகளை முறையாக பராமரிக்காததால், பல சாலைகள் குண்டும் குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வந்தனர்.
இதையடுத்து, சீரமைப்பு பணிக்காக மெட்ரோ ரயில்வே நிறுவனம், 300 கோடி ரூபாயை, மாநில நெடுஞ்சாலைத்துறையிடம் அளித்தது.
இந்த நிதியில், சாலைகள் சீரமைக்கும் பணிகள் செப்டம்பரில் துவங்கப்பட்டன. அக்டோபரில் வடகிழக்கு பருவமழை துவங்கியதால் சீரமைக்கப்பட்ட சாலைகள், குறுகிய காலத்தில் சேதமடைந்தன. மழையால் பல இடங்களில் சாலை போடும் பணிகளும் முடங்கின.
சீரமைப்பு சென்னையில் மழை நின்று, வெயில் தலைகாட்ட துவங்கியுள்ளதால், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை, நெடுஞ்சாலைத் துறை துவங்கியுள்ளது.
அதேபோல், சென்னை மாநகராட்சியும் பல்வேறு சாலைகளில், 'பேட்ச் ஒர்க்' செய்ய துவங்கியுள்ளது. இப்போது மேற்கொள்ளும் ஒட்டு வேலை பணிகளாவது, பருவ மழையை தாக்குப்பிடிக்கும் வகையில் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

