sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 10, 2025 ,ஆவணி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பலவீனமாக உள்ள கடப்பாக்கம் ஏரிக்கரை வரும் பருவ மழைக்கு தாக்குப்பிடிக்குமா?

/

பலவீனமாக உள்ள கடப்பாக்கம் ஏரிக்கரை வரும் பருவ மழைக்கு தாக்குப்பிடிக்குமா?

பலவீனமாக உள்ள கடப்பாக்கம் ஏரிக்கரை வரும் பருவ மழைக்கு தாக்குப்பிடிக்குமா?

பலவீனமாக உள்ள கடப்பாக்கம் ஏரிக்கரை வரும் பருவ மழைக்கு தாக்குப்பிடிக்குமா?


ADDED : ஆக 27, 2025 12:17 AM

Google News

ADDED : ஆக 27, 2025 12:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மணலி, பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், பலவீனமாக உள்ள கடப்பாக்கம் ஏரிக்கரை வரும் பருவமழைக்கு தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மணலி மண்டலம், 16வது வார்டில் கன்னியம்மன்பேட்டை கிராமத்தை ஒட்டி, 149 ஏக்கர் பரப்பளவில் கடப்பாக்கம் ஏரி உள்ளது. இங்கு, 1.1 மில்லியன் கன மீட்டர் தண்ணீர் தேங்க கூடிய வகையில் இருந்தது.

கொசஸ்தலை வடிநிலத்திட்டத்தின் கீழ், கடப்பாக்கம் ஏரியை, ஆசிய வளர்ச்சி வங்கியின் சுற்றுசூழல் நிதி, 50.91 கோடி, சென்னை மாநகராட்சியின், 7.42 கோடி என, 58.32 கோடி ரூபாய் செலவில், துார்வாரி, 2.2 மில்லியன் கன மீட்டர் தண்ணீர், சேமிக்கும் வகையில் புனரமைக்கும் பணி, கடந்தாண்டு துவங்கியது.

அதன்படி, 6 - 15 அடி ஆழத்திற்கு சமனற்ற நிலையில் இருக்கும் ஏரியை துார்வாரி, கரைகளை பலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக, ஏற்கனவே இருந்த கரைகளை தகர்த்து, பலப்படுத்தும் பணிகள் ஏரிக்கரை பகுதிகளில் நடந்து வருவதால், ஆங்காங்கே பலவீனமாக காட்சியளிக்கிறது. இதற்கிடையில், அவ்வப்போது கனமழை பெய்து வருவதால், ஏரிக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

வரும் பருவமழைக்கு ஏரி நிரம்பி வழியும் சூழல் ஏற்படும். அதுபோன்ற சூழலில் கரைகள் பலவீனமாக இருந்தால், சுற்றுவட்டார விளை நிலங்கள், குடியிருப்புகள் வெள்ளபாதிப்பில் சிக்கும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

எனவே, ஏரி புனரமைப்பு பணிகளில், முதற்கட்டமாக ஏரிகள் உடையாத அளவிற்கு, பலப்படுத்தும் பணியை முடிக்க வேண்டும் என, பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்தை, மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us