/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கொண்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? திறந்து கிடக்கும் மூடிகளாலும் உயிர்பலி அபாயம்
/
கொண்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? திறந்து கிடக்கும் மூடிகளாலும் உயிர்பலி அபாயம்
கொண்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? திறந்து கிடக்கும் மூடிகளாலும் உயிர்பலி அபாயம்
கொண்டித்தோப்பு பகுதியில் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்குமா? திறந்து கிடக்கும் மூடிகளாலும் உயிர்பலி அபாயம்
ADDED : நவ 10, 2025 01:32 AM

கொண்டித்தோப்பு: கொண்டித்தோப்பு பகுதியில் பழமையான கழிவுநீர் குழாய்களை மாற்றி அமைத்து, அப்பகுதி மக்கள் தினசரி எதிர்கொள்ளும் கழிவுநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட கொண்டித்தோப்பு, 53வது வார்டு படவட்டம்மன் கோவில் தெருவில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இப்பகுதியில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறி தெருக்களில் தேங்கி நிற்கும் அவலம், பல ஆண்டுகளாக தொடர்கதையாக உள்ளது.
ஒவ்வொரு முறையும் புகார் அளிக்கும்போது, மாநகராட்சி ஊழியர்கள் வந்து அடைப்பை அகற்றி செல்கின்றனர். திரும்பவும் அடைப்பு ஏற்படுகிறது.
தினசரி கழிவுநீர் கால்வாய் மூடிகளை திறக்க வேண்டும் என்பதால், ஊழியர்களும் மூடாமல் சென்று விடுகின்றனர்.
இதனால், பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகளும் அதில் விழுந்து மீண்டும் அடைப்பு ஏற்படக் காரணமாக உள்ளது.
அதுமட்டுமல்லாமல், இரவு வேளைகளில் குழந்தைகள் தவறி விழும் அபாயமும் உள்ளது. மேலும், கடும் துர்நாற்றத்துடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, பல ஆண்டுகளாக தொடரும் கழிவுநீர் அடைப்பு பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

