ADDED : ஜன 30, 2024 12:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயம்பேடு பேருந்து நிலையம், மார்க்கெட் பூங்கா, கூடுதலாக உள்ள நிலத்தை சேர்த்தால் மொத்தம் 66.4 ஏக்கர் இடம் கிடைக்கும். இதன் சந்தை மதிப்பு 13,200 கோடி ரூபாய். கோயம்பேடு நிலையம் அமைந்துள்ள இடத்தில் மிகப்பெரிய திட்டத்தை செயல்படுத்தப் போவதாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் அறிவித்துள்ளது. இதனால், இந்த இடம் அபுதாபியைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்படுவது உறுதியாகிறது. மிக அதிக மதிப்புள்ள, மக்களுக்கு சொந்தமான நிலத்தை, தனியாருக்கு தாரை வார்ப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 66 ஏக்கரில் பூங்கா அமைக்க வேண்டும்.
- அன்புமணி, பா.ம.க., தலைவர்.