/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.9.50 லட்சம் மோசடி செய்த பெண் கைது
/
ரூ.9.50 லட்சம் மோசடி செய்த பெண் கைது
ADDED : செப் 05, 2025 02:22 AM
எம்.ஜி.ஆர்., நகர், அரசு வேலை வாங்கி தருவதாக, 9.50 லட்சம் ரூபாய் மோசடி செய்த, நகலெடுப்பு கடை பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் சக்ரவர்த்தி, 41. இவர், பி.இ., எலக்ட்ரி கல்ஸ் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, 2020ல், ராமாபுரம் பகுதியை சேர்ந்த அஞ்சுகம், 49, என்ற பெண் அறிமுகமாகியுள்ளார்.
சக்ரவர்த்திக்கு அரசு வேலை வாங்கி தருவாக அஞ்சுகம் ஆசை வார்த்தை கூறி, ஆறு தவணையாக, 9.50 லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் பேசியபடி, வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திரும்ப தராமல் இருந்துள்ளார்.
இதையடுத்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சக்ரவர்த்தி அளித்த புகாரின்படி, எம்.ஜி.ஆர்., நகர் போலீசார் வழக்கு பதிந்தனர்.
விசாரணையில், ராமாபுரம் பகுதியில் அஞ்சுகம், நகலெடுப்பு கடை நடத்தி வருவதும், சக்ரவத்தியிடம் பணம் பெற்று மோசடி செய்ததும் உறுதியானது.
இதையடுத்து, அஞ்சுகத்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.