/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி
/
டி.ஜி.பி., ஆபீஸ் முன் பெண் தற்கொலை முயற்சி
ADDED : நவ 12, 2025 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: துாத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் மெல்சி அகஸ்தினாள், 52. நேற்று காலை, டி.ஜி.பி., அலுவலகத்திற்கு வந்த இவர் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தற்கொலைக்கு முயன்றார்.
அவரை, பாதுகாப்பு போலீசார் தடுத்து நிறுத்தினர். தனக்கு சொந்தமான இடத்தை ஏமாற்றி, மரிய சூசை என்பவர் அபகரித்துவிட்டதாக கூறினார்.
அவரிடம் புகாரை பெற்ற சத்யபிரியா ஐ.பி.எஸ்., உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து, அவர் அங்கிருந்து கிளம்பினார்.

