sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

ரூ.38 லட்சம் மோசடி பலே பெண் சிக்கினார்

/

ரூ.38 லட்சம் மோசடி பலே பெண் சிக்கினார்

ரூ.38 லட்சம் மோசடி பலே பெண் சிக்கினார்

ரூ.38 லட்சம் மோசடி பலே பெண் சிக்கினார்


ADDED : செப் 22, 2024 09:05 PM

Google News

ADDED : செப் 22, 2024 09:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி:சென்னை, மண்ணிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா, 34; டிராவல்ஸ் ஏஜன்சி நடத்தி வருகிறார். இவருக்கு, ஆவடி அடுத்த அரிக்கம்பேடு, சாலமன் நகரைச் சேர்ந்த சாந்தினி, 34, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

அப்போது சாந்தினி, வெளிநாடுகளில் வேலைக்குச் செல்ல ஆட்களை அனுப்பினால், நல்ல கமிஷன் தருவதாக, ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

அதன்படி சந்தியா, வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி, தனக்கு தெரிந்தவர்கள் 15 பேரிடம், 38 லட்சம் ரூபாய் வசூல் செய்து, சாந்தினியிடம் கொடுத்துள்ளார்.

பணத்தை பெற்றுக்கொண்ட சாந்தினி, வேலை வாங்கித் தராமலும், பணத்தையும் திருப்பித் தராமலும் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து கடந்த 2021ல், மத்திய குற்றப்பிரிவில் சந்தியா புகார் அளித்தார்.

புகாரின்படி விசாரித்த ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், தலைமறைவாக இருந்த சாந்தினியை கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us