/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
/
2வது மாடியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ADDED : மே 26, 2025 03:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திரு.வி.க., நகர்:திரு.வி.க.நகர், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் பார்த்திபன், 42; கட்டட தொழிலாளி. இவரது மனைவி தீக்கி, 39. இருவரும், அதே பகுதியில் கட்டடப்பணி மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 'லிப்ட்'க்கான பள்ளத்தில், தீக்கி கால் இடறி விழுந்தார்.
இதில், தீக்கியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்ட பார்த்திபன், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு மருத்துவ பரிசோதனையில், அவர் உயிரிழந்தது தெரிய வந்தது. இது குறித்து திரு.வி.க., நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.