/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு
/
காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு
ADDED : ஜன 05, 2026 05:49 AM
குன்றத்துார்: குன்றத்துார் அருகே, வேகமாக சென்ற காரில் இருந்து விழுந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், குன்றத்துார் அருகே வேகமாக சென்ற காரில் இருந்து, பெண் ஒருவர், கீழே விழுந்து மயக்கமடைந்தார். அப்பகுதி மக்கள், குன்றத்துார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், சிறு காயத்துடன் மதுபோதையில் இருந்த பெண்ணை மீட்டு, தாம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவர், ஆந்திராவைச் சேர்ந்த யாமலா சத்யா, 35, என்பது, விசாரணையில் தெரியவந்தது. மேலும், தன்னை யாரும் காரில் இருந்து தள்ளி விடவில்லை; தடுமாறி கிழே விழுந்ததாக, போலீசாரிடம் அவர் கூறியுள்ளார்.
வழக்குப்பதிந்த போலீசார் விசாரிக்கின்றனர்.

