/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கன்டெய்னர் லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
/
கன்டெய்னர் லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
கன்டெய்னர் லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
கன்டெய்னர் லாரி மோதியதில் ஸ்கூட்டரில் சென்ற பெண் பலி
ADDED : நவ 11, 2025 12:45 AM
மணலி: கன்டெய்னர் லாரி மோதி பெண் பலியானார்.
மணலிபுதுநகர், துவாரகா நகரைச் சேர்ந்தவர் சாந்தி, 55. இவர், நேற்று காலை, டி.வி.எஸ்., ஸ்கூட்டரில், மணலிபுதுநகரில் இருந்து மணலி நோக்கி சென்றுள்ளார்.
பொன்னேரி நெடுஞ்சாலை, மணலி - வைக்காடு சந்திப்பு அருகே சென்றபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி மோதி, கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தகவலறிந்த செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கன்டெய்னர் லாரி ஓட்டுநரான, பெரம்பலுாரைச் சேர்ந்த மோகன்ராஜ், 27, என்பவரை, கைது செய்து விசாரிக்கின்றனர்.

