sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

கன்டெய்னர் லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு

/

கன்டெய்னர் லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு

கன்டெய்னர் லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு

கன்டெய்னர் லாரியில் சிக்கி பெண் உயிரிழப்பு


ADDED : ஜன 09, 2024 12:41 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர், எண்ணுார், காட்டுகுப்பத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார், 42. இவரது மனைவி நந்தினி, 39; மீன் வியாபாரம் செய்து வந்தார். தம்பதிக்கு, மகன், மகள் உள்ளனர்.

நேற்று மாலை, சம்பத்குமார் - நந்தினி தம்பதி, எண்ணுாரில் இருந்து திருவொற்றியூர் செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தனர்.

எர்ணாவூர் மேம்பாலத்தில், பக்கவாட்டில் சென்ற கன்டெய்னர் லாரி உரசியதில், இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி, விபத்துக்குள்ளானது. இதில், சம்பத்குமார் படுகாயம் அடைந்தார்.

நந்தினி, கன்டெய்னர் லாரியின் சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த, காட்டுகுப்பம் பகுதி மக்கள், அங்கு மறியலில் ஈடுபட்டனர்.

எண்ணுார் போலீசார் அவர்களை சமாதானம் செய்து, படுகாயம் அடைந்த சம்பத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த நந்தினியின் உடல் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்த ரெட்ஹில்ஸ் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், தப்பியோடிய கன்டெய்னர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us