sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பணத்தை ஏமாற்றிய ஏட்டுவின் மனைவி, மகளை தாக்கிய பெண்

/

பணத்தை ஏமாற்றிய ஏட்டுவின் மனைவி, மகளை தாக்கிய பெண்

பணத்தை ஏமாற்றிய ஏட்டுவின் மனைவி, மகளை தாக்கிய பெண்

பணத்தை ஏமாற்றிய ஏட்டுவின் மனைவி, மகளை தாக்கிய பெண்


ADDED : நவ 29, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 29, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடபழனி,

வடபழனி, சிவன் கோவில் தெருவில் உள்ள காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லதுரை, 46; கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலர். இவரது மனைவி செல்வி, 43, மகள் மாலினி,20.

கோட்டூர்புரம் துரைசாமி நகரைச் சேர்ந்த 29 வயது பெண், வடபழனி காவலர் குடியிருப்பில் உள்ள செல்லதுரை வீட்டிற்கு நேற்று முன்தினம் சென்றார்.

தன்னிடம், செல்லதுரை பணம் வாங்கியதாகவும் திருப்பி தராமல் அலையவிடுவதாகவும் கூறி, செல்லதுரையின் மனைவி மற்றும் மகளிடம் வாக்குவாதம் செய்து, இருவரையும் அப்பெண் கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது.

நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் செல்லதுரை பணிபுரிந்தபோது, அப்பகுதியில் ஒரு பெண்ணிடம் பணத்தை வாங்கி ஏமாற்றிய வழக்கில், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பின், பணிக்கு சேர்ந்து, பணி மாறுதலில் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார்.

இந்நிலையில், கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து, புதுப்பேட்டை ஆயுதப்படைக்கு செல்லதுரை நேற்று மாற்றப்பட்டுள்ளார். அவரிடம், துறை ரீதியான விசாரணையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us