ADDED : ஏப் 15, 2026 10:12 PM
அ நிறம் | அளவு
சைதாப்பேட்டை:பெண்ணை தாக்கிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை, ஜோதி தோட்டத்தை சேர்ந்தவர் வசந்தி, 56. கடந்த 11ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த முகமது உசேன், 23, என்பவர், வசந்தியிடம், 'உன் பேரன் லோகேஷ், எனக்கு பிடிக்காத நபர்களுடன் ஊர் சுற்றுகிறான். ஒழுங்காக இருக்க சொல்' என, கூறி உள்ளார்.
இதில் ஏற்பட்ட தகராறில், முகமது உசேன், வசந்தியை சரமாரியாக தாக்கவிட்டு தப்பி சென்றார். சைதாப்பேட்டை போலீசார், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, நேற்று முகமது உசேனை கைது செய்தனர்.
