sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்

/

 கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்

 கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்

 கோயம்பேடு சந்தையில் பழங்கள் திருடிய பெண்கள்


ADDED : நவ 12, 2025 10:37 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயம்பேடு: கோயம்பேடு சந்தையில் மூடிய கடைகளில் இருந்த பழங்களை திருடிய பெண்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோயம்பேடு பழ சந்தைக்கு, வெளி மாநிலம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் 100க்கும் மேற்பட்ட லாரிகளில் பழ வகைகள் எடுத்து வரப்படுகின்றன.

காலை முதல் இரவு 11:00 மணி வரை சந்தையில் பழங்கள் விற்கப்படும். அதன் பின், கடைகளின் முன், பெட்டிகளில் பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு, தார்ப்பாய் உள்ளிட்டவற்றால் பாதுகாப்பாக மூடி வைக்கப்படும்.

இந்நிலையில், கடைகள் மூடப்பட்ட பின், கடைகளில் மூடிவைக்கப்படும் பழங்கள், அடிக்கடி திருடப்பட்டு வந்தது. இதுகுறித்து வியாபாரிகள், கோயம்பேடு போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார், அப்பகுதி கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, மூன்று பெண்கள் பழங்களை திருடிச் செல்வது தெரிந்தது. இத்திருட்டு குறித்து, கோயம்பேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us