/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
60 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
/
60 அடி உயரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி பலி
ADDED : ஜன 11, 2026 05:08 AM
சென்னை: கோட்டூர்புரத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வடமாநில தொழிலாளி, கால் இடறி, 60 அடி உயரத்திலிருந்து தவறி விழுந்ததில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் அப்துல் பாரிக், 36. இவர், கோட்டூர்புரம் சர்தார் படேல் சாலையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான இடத்தில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று மாலை பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கால் இடறி, 60 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சம்பவம் அறிந்து வந்த கோட்டூர்புரம் போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

