ADDED : ஏப் 16, 2026 11:30 PM
அ நிறம் | அளவு
பம்மல்: சென்னை, ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் வீரராகவன், 60. பம்மல், எச்.எல்., காலனியில் அடுக்குமாடி குடியிருப்பில் வண்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று காலை, வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக அவ்வழியாக செல்லும் மின் வடத்தில் உரசியதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீசார், விரைந்து உடலை கைப்பற்றி, தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, சங்கர் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
