ADDED : நவ 21, 2025 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புழல்: செங்குன்றம் அடுத்த சோத்துப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜெயகுமார், 55; சலவை தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, செங்குன்றத்தில் பணி முடித்துவிட்டு, சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
பாலவாயல் - சோத்துப்பாக்கம் சாலையில் சென்ற போது, பின்னால் வந்த மினி லாரி, ஜெயகுமார் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந் த ஜெயக்குமாருக்கு, தலையில் பலத் த காயம் ஏற்பட்டது.
ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெயக்குமார், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து, மினி லாரி ஓட்டுநரான ஆத்துாரைச் சேர்ந்த ராகேஷ், 24, என்பவரை கைது செய்தனர்.

