sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'

/

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'

பிரியாணி சாப்பிட்ட வாலிபர் 'அட்மிட்'


ADDED : ஆக 05, 2025 12:14 AM

Google News

ADDED : ஆக 05, 2025 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பூக்கடை, நடைபாதை கடையில், பிரியாணி சாப்பிட்ட வாலிபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரம்பலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி, 21; சென்னை, பார்க் டவுன், ராசப்பா செட்டி தெருவில் தங்கி, டிரான்ஸ்போர்டில் வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, விடுமுறை தினம் என்பதால், பூக்கடை, ரத்தன் பஜாரில் உள்ள நடைபாதை பிரியாணி கடை ஒன்றில், பீப் பிரியாணி சாப்பிட்டுள்ளார். ஒரு மணி நேரத்தில், பெரியசாமிக்கு தோலில் அலர்ஜி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின், மேல் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பல்லி விழுந்த உணவு காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லம் - வடகால் சிப்காட்டில் 'லயசன் இன்க்' என்ற கார் உதிரி பாகம் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது.

இங்குள்ள கேன்டீனில், நேற்று காலை உணவை 30 பேர் சாப்பிட்டனர். அப்போது, சாம்பாரில் பல்லி இருந்தது தெரிந்தது. 30 தொழிலாளர்கள், வல்லக்கோட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதிக்கப்பட்டனர். ஐந்து பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மற்றவர்கள் பணிக்கு திரும்பினர்.






      Dinamalar
      Follow us