ADDED : நவ 03, 2024 12:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூர், ஜோதி நகரை சேர்ந்தவர் அரவிந்த், 24. நேற்று முன்தினம், விம்கோ நகர் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்ட்ரலில் இருந்து, கும்மிடிபூண்டி நோக்கி சென்ற மின்சார ரயிலில் சிக்கி, உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவலறிந்த, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார், இறந்த வாலிபரின் உடலை மீட்டு, விசாரிக்கின்றனர்.