ADDED : மார் 19, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொருக்குப்பேட்டை, சென்னை, கொருக்குப்பேட்டை, பாரதி நகர் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் முருகன், 35; இவர் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் கொருக்குப்பேட்டை ரயில் நிலையம் வழியே நடந்து சென்றார்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, அவ்வழியே வந்த மின்சார ரயில் மோதி முருகன் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
இதை பார்த்த அப்பகுதி மக்கள் கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார், அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.