sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

குப்பை லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

/

குப்பை லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

குப்பை லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு

குப்பை லாரியில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு


ADDED : ஜூலை 23, 2025 12:40 AM

Google News

ADDED : ஜூலை 23, 2025 12:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டையார்பேட்டை, குப்பை லாரியை பைக்கில் முந்த முயன்ற வாலிபர், முன்பக்க சக்கரத்தில் சிக்கி பலியானார்.

தண்டையார்பேட்டை, கைலாச நகரைச் சேர்ந்தவர் பாபு, 45; குப்பை லாரி டிரைவர். இவர் நேற்று தண்டையார்பேட்டையில் இருந்து குப்பையை சேகரித்து கொண்டு, மணலி நெடுஞ்சாலை, எழில் நகர் மேம்பாலம் வழியாக வந்தார்.

அப்போது, தண்டையார்பேட்டை, கைலாசநாதர் தெருவைச் சேர்ந்த கணேஷ், 25, என்பவர், அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரது பின்னால், தண்டையார்பேட்டை, சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த பாரத், 22, என்பவர் அமர்ந்திருந்தார்.

குப்பை லாரியை கணேஷ் முந்த முயன்றபோது, லாரியின் முன்சக்கரத்தில் சிக்கி கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மறுபுறம் சரிந்த பாரத், அதிர்ஷ்டவசமாக காயமின்றி தப்பினார்.

இது குறித்து, புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us