ADDED : ஜன 12, 2024 12:56 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செய்யூர்,செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட தழுதாளிக்குப்பத்ைத சேர்ந்தவர் ரவி, 60. இவரின் மகன் சற்குருநாதன், 27. இவர்கள் மீன்பிடி தொழில் செய்து வந்துள்ளனர்.
நேற்று காலை 4:00 மணிக்கு, தனக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க ரவி புறப்பட்டார்.
அவருடன், மகன் சற்குருநாதன், 27, நண்பர் மாரிமுத்து, 65 ஆகியோரும் கடலுக்கு சென்றுள்ளனர். கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால், கரை அருகே திடீரென படகு கவிழ்ந்தது.
கடலில் மூழ்கிய மூவரையும், அருகே படகில் இருந்த மீனவர்கள் மீட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சற்குருநாதனை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். செய்யூர் போலீசார், வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.