sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 18, 2025 ,மார்கழி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அ,ஆ தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு

/

அ,ஆ தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு

அ,ஆ தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு

அ,ஆ தெரியாத 11 ஆயிரம் பேர் புதிய பாரத திட்டத்தில் இணைப்பு


ADDED : ஜூன் 01, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவை மாவட்டத்தில் 15 வயதுக்கு மேற்பட்ட எழுதப் படிக்க தெரியாதவர்களை, கணக்கெடுக்கும் பணியில், 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர்.

மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவுத் திட்டத்தின் கீழ், நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் எழுதப் படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேலானவர்களைக் கணக்கெடுக்கும் பணி, மாவட்ட வாரியாக நடந்து வருகிறது.

கோவை மாவட்டத்தில், இந்த கணக்கெடுக்கும் பணி மே 2ம் தேதி துவங்கப்பட்டது. மே 24ம் தேதிக்குள் இப்பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மழை உள்ளிட்ட காரணங்களால் ஒரு சில பகுதிகளில் தாமதமானது. கோவை மாவட்டத்தை, 100 சதவீத எழுத்தறிவுள்ள மாவட்டமாக்கும் வகையில், இப்பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த கணக்கெடுப்புப் பணியில், இதுவரை 11 ஆயிரத்து 804 எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட 927 தன்னார்வலர்கள் மூலம் கல்வி பயிற்றுவிக்கப்படவுள்ளதாக, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us