sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்

/

கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்

கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்

கோவை அரசு கல்லுாரியில் 1433 இடங்கள்; இன்று முதல் விண்ணப்ப பதிவு துவக்கம்


ADDED : மே 06, 2024 12:17 AM

Google News

ADDED : மே 06, 2024 12:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:மாநில அளவில், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் முதலாமாண்டு சேர்க்கைக்கான ( 2024-25) விண்ணப்ப பதிவு, இன்று முதல் துவங்கவுள்ளது என கோவை அரசு கலை கல்லுாரி முதல்வர் உலகி தெரிவித்தார்.

மாணவர்கள், www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம். தாமாக விண்ணப்பிக்க முடியாதவர்கள், அரசு கலை அறிவியல் கல்லுாரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்களை அணுகலாம். மையங்களின் முகவரிகளும் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

விண்ணப்ப கட்டணமாக, 48 ரூபாயும் பதிவு கட்டணமாக 2 ரூபாய் செலுத்தவேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை. மேலும், விபரங்களுக்கு 044-24343106 / 24342911 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து, கோவை அரசு கலை கல்லுாரி உலகி கூறுகையில், '' கோவை அரசு கலை கல்லுாரியில், 23 இளநிலை படிப்புகளில், இரண்டு சுழற்சிகளிலும் சேர்த்து, 1,433 மாணவர்களை சேர்க்கவுள்ளோம். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கல்லுாரியில் அமைந்துள்ள உதவிமையம், இன்று முதல் காலை, 10:00 மணி முதல் மாலை, 4:00 மணி வரை செயல்படும், '' என்றார்.






      Dinamalar
      Follow us