ADDED : ஆக 22, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மீண்டும் மழைப்பொழிவு காணப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, நீர்ப்பிடிப்பு பகுதியில் 18 மி.மீ., அடிவாரத்தில், 7 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. அதனால், 42.54 அடியாக நீர் மட்டம் உயர்ந்திருக்கிறது.
குடிநீர் தேவைக்காக, 10.62 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.