/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
31 வகை மரக்கன்றுகள் இலவசமாக பெறலாம்
/
31 வகை மரக்கன்றுகள் இலவசமாக பெறலாம்
ADDED : ஆக 02, 2024 05:14 AM

கோவை : தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ், வனத்துறை சார்பில் 31 வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், தொழில் நிறுவனங்கள் இந்த மரக்கன்றுகளைப் பெறலாம்.
இதுதொடர்பாக, பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகர் மைனா கூறியதாவது:
கோவை வனக்கோட்டம் பெ.நா.பாளையம் மற்றும் தொண்டாமுத்தூர் சமூக காடுகள் சரகம், நவீன நாற்றங்காலில், நிழல் தரக்கூடிய மரங்கள், பழ வகை, தடி மரம் ஆகிய மர வகைகளின் நாற்றுகள், இலவசமாக வழங்கப்படுகின்றன.
தேக்கு, நாவல், மகாகனி, மகிழம்,நெல்லி, பாதாம், வேங்கை, பூவரசு, விளாமரம், சரக்கொன்றை, மந்தாரை, இயல்வாகை, இலுப்பை, இலைபுரசு, மஞ்சக்கடம்பு, செண்பகம், சொர்கம், வேம்பு, தான்றி, புங்கன், அத்தி, நெட்டிலிங்கம், புன்னை, பூவரசு, மாதுளை, மகாகனி, கொய்யா, நீர்மருது, சீதா, சவுக்கு, எலுமிச்சை ஆகிய மரக்கன்றுகள் வழங்கப்படும்.
தேவைப்படுவோர், தங்களின் 2 புகைப்படம், ஆதார் அட்டை நகல், பட்டா அல்லது சிட்டா நகல் ஆகியவற்றுடன் அணுகலாம். கோவை, ரேஸ்கோர்ஸில் நாற்றங்கால் உள்ளது. மேலும் விவரங்களுக்கு, 0422-2445522, 9698417897, 7904203235, 7603883303 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.