sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்

/

50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்

50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்

50 ஆயிரம் வாழை மரங்கள்: சூறாவளி காற்றால் சேதம்


ADDED : மே 05, 2024 12:34 AM

Google News

ADDED : மே 05, 2024 12:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;சிறுமுகை பகுதியில், நேற்று மாலை வீசிய சூறாவளி காற்றால், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்தன.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை, 4 மணி அளவில் பத்து நிமிடம் மழை பெய்தது. மழை பெய்யும் முன், வீசிய சூறாவளி காற்றால், சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல் ஆகிய பகுதிகளில், 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து விழுந்து சேதம் அடைந்தன.

ஜடையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட மாதனுாரில் ராம்சுந்தர் என்பவர் தோட்டத்தில், 2000 நேந்திரம் வாழை மரங்கள், சூறாவளி காற்றுக்கு முறிந்து விழுந்தன.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'கடன் பெற்று வாழை பயிர் செய்துள்ளோம். மழை இல்லாததால், குறைவான தண்ணீரை வைத்து, விவசாயம் செய்து வந்த நிலையில், இன்னும் இரண்டு மாதத்தில், அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த, வாழை மரங்கள், சூறாவளி காற்றால் விழுந்து சேதம் அடைந்தன.

இதனால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு விவசாயிகளுக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வறட்சியான காலத்தில் இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இந்த சேதத்திற்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us